logo


1 / 3
2 / 3
3 / 3





    வீடு கட்டுவதற்கான கடன்



1.

கடன் திட்டத்தின் பெயர்

வீடு கட்டுவதற்கு கடன்

2.

கடன் வழங்கும் நோக்கங்கள்

1) புதிய வீடு கட்டுதல் / அடுக்குமாடி குடியிருப்பு வாங்குதல்
2) கட்டி முடிக்கப்பட்டல் வீடு வாங்குதல்
3) வீடு வாங்குவதாக இருந்தால் , கட்டடம் கட்டப்பட்டு 15 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
4) வீட்டு வசதிகள் அதிகப்படுத்தி வீடு மாற்றம் செய்தல்.
5) வீடு மேலும் 25 ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கத்தக்கதாக இருக்க வேண்டும்.
6) வீட்டு மனை வாங்குதல்

3.

நிபந்தனைகள்

1) விண்ணப்பதாரர் நிரந்தரப்பணியில் உள்ளவராகவோ, அல்லது தொழில் செய்பவராகவோ அல்லது நிரந்தர மாத வருமானம் உள்ளவாராகவோ இருக்கவேண்டும்.
2) விண்ணப்பதாரர் தனது பெயரில், மனைவி / கணவன் பெயரில் அல்லது பிள்ளைகள் பெயரில், வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வாங்கலாம். அவருக்கு வங்கியின் செயல் எல்லைக்குள் வீடு அல்லது அடுக்குமாடி இருக்கக்கூடாது.
3) வாங்க இருக்கும் வீடு அல்லது மனை வங்கியின் செயல் எல்லைக்குள் இருக்க வேண்டும்.
4) கடன், கணவன் மற்றும் மனைவி பெயரில், தந்தை மற்றும் மகன் பெயரில், தாயார் மற்றும் மக்கள் பெயரில், தாயார் மற்றும் மகன், தந்தை மற்றும் மகள் பெயரில் இணைந்து விண்ணப்பிக்கலாம்..

4.

பிணையம்

புதிய வீடு அல்லது கட்டப்பட்ட வீடு வங்கிக்கு அடமானம் செய்து கொடுக்கப்பட வேண்டும். இணைந்து விண்ணப்பம் கொடுப்பவர்கள், அடமானத்தில் அவர்களது வாரிசுகளையும் காட்ட வேண்டும். அடமானத்திலும் புரோநோட்டிலும் கூட்டாக கையொப்பமிட வேண்டும்.

5.

இணை உறுப்பினர்

மனுதாரரும் பிணையதாரரும் ரூ100/- செலுத்தி, இணை உறுப்பினராக வேண்டும். 18 வயது நிரம்பியவராகவும், வங்கியில் செயல் எல்லையில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்..

6.

கடன் அளவு

1) வீடு வாங்க்குதல் மற்றும் விரிவுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்கு உச்ச அளவாக ரூ.20/- லட்சம் வரை கடன் அனுமதிக்கப்படும். வங்கியால் நியமிக்கப்பட்ட பொறியாளரிடம் திட்ட மதிப்பீடு மற்றும் வீட்டின மதிப்பீடு பெறவேண்டும்.
2) விரிவுப்படுத்தும் நோக்கத்திற்காக ரூ 3/- லட்சம் வரை கடன் அனுமதிக்கப்படும். பொறியாளர் மதிப்பீட்டில் 85% அனுமதிக்கப்படும்.

7.

மனுதாரர் ஏற்க வேண்டிய சொந்த நிதியின் அளவு

1) ரூ.10/- லட்சம் வரை உள்ள கடனுக்கு பொறியாளர் மதிப்பீட்டில் - 15%
2) ரூ10/- லட்சத்திற்கு மேல் பொறியாளர் மதிப்பீட்டில் - 20%

8.

தவணை காலம்

1) மனுதாரர் 70 வயதை நிறைவு செய்வதற்கு முன்பே, அசல் மற்றும் வட்டியை திரும்ப செலுத்தும் அளவில், தவணை நிர்ணயிக்கப்பட வேண்டும்.
2) வாங்குவதற்கு 20 வருடங்கள்
3) மனை வாங்குதல் மற்றும் விரிவுப் படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்கு 5 வருடங்கள்.

9.

வருமானம்

1) மனுதாரர் மாத ஊதியம் பெறுபவராக இருந்தால், வீட்டுக்கு எடுத்துச் செல்லும் ஊதியம் (Home Carrying Salary) மொத்த ஊதியத்தில் 30 விழுக்காட்டுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
2) மனுதாரரின் மனைவி/ கணவன்-மகன், மகள் ஆகியோர் வருவாய் ஈட்டுபவர்களாக இருந்தால் இந்த வருவாயையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு சான்று இணைக்க வேண்டும்.ஊதியச்சான்று அல்லது பட்டய கணக்காளர் சான்று அல்லது வருமானவரி தாக்கல் செய்த படிவ நகல் ஆகிய ஏதாவது ஒன்று சமர்ப்பிக்க வேண்டும்.

10.

வட்டி

12 %

11.

கடனுக்கு ஆதாரம்

அனைத்து நோக்கங்களுக்கும், வீட்டை வங்கிக்கு அடமானம் கொடுக்க வேண்டும்.

12.

சட்ட ஆலோசகர் மற்றும் G S T கட்டணம்

1) அனுமதிக்கும் கடன் தொகைக்கு GST வசூலிக்கப்பட வேண்டும். இது குறைந்தது ரூ 1,500/-ம் உச்ச அளவாக ரூ2,500/-ம் வசூலிக்க வேண்டும்.
2) சட்ட ஆலோசகர் கட்டணம் 1% குறைந்தது ரூ 1,000/- உச்சபட்சம் ரூ 2,500/- மனுதாரரிடம் பெற்று கடன் மனுவுடன் தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

13.

காப்பீடு

1) வீடு, வங்கியின் கூட்டுப்பெயரில் காப்பீடு செய்யப்பட வேண்டும். நெருப்பு , வெள்ளம், புயல் ஆகியவற்றுக்கும், கடன் மற்றும் உத்தேச வட்டி சேர்த்து காப்பீடு செய்ய வேண்டும். .
2) தனி நபர் விபத்து காப்பீடு செய்யப்பட்வேண்டும்.

14.

கடன் பட்டுவாடா முறை

1) கடன் அனுமதியில் காணப்படும் நிபந்தனைகள் நிறைவு செய்யப்படவேண்டும். தனது சொந்த நிதியில் கட்டிடப்பணியை தொடங்க வேண்டும். சொந்த நிதியை பயன்படுத்தியதற்கு பொறியாளர் சான்று கொடுத்த பின்னர் கடன் தொகையில் 20% முதல் தவணை பட்டு வாடா செய்ய வேண்டும்.
2) கட்டிடப்பணி முடிக்கப்பட்டதை பொறியாளர் பார்வையிட்டு சான்று செய்த பின்னர், இரண்டாவது தவணை 40% பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.
3) இரண்டாவது கட்டிடப்பணி முடிக்கப்பட்டதை பொறியாளர் பார்வையிட்டு சான்று கொடுத்த பின்னர் மூன்றாவது தவணை 40% பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.
4) ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டை வாங்கினால், பொறியாளர் மதிப்பீடு பெற்று அடமானம் செய்த பின்னர், ஒரே தவணையில் பட்டுவாடா செய்ய வேண்டும். ஒரே தவணையில் பட்டுவாடா செய்யும்போது, ஒவ்வொரு தவணைக்கும் வங்கி அலுவலரும் நேரில் சென்று பார்வையிட்டு பட்டுவாடா செய்ய வேண்டும்.

15.

இணைக்க வேண்டிய ஆவணங்கள்

1) சொத்துக்களுக்கான மூலப்பத்திரம்.
2) மனுதாரர் பெயரில் பட்டா ( கணினி பட்டா)
3) 30 வருட வில்லங்கச்சான்று
4) அடங்கல் பதிவேடு
5. ஒப்புதல் செய்யப்பட்ட வீட்டு / மனை வரைபடம்
6. பதிவு பெற்ற பொறியாளர் (Charted Engineer) மதிப்பீட்டு அறிக்கை
7. திட்ட குழுமம் / ஊராட்சி ஒப்புதல் சான்று நகல்
8. வட்டாச்சியரிடமிருந்து வருவாய் சான்றிதழ்
9. ஊராட்சி / நகராட்சியிடமிருந்து கட்டட வயது சான்று
10. தொழில் செய்பவர்களுக்கு கடந்த மூன்றாண்டு வருமான வரி படிவ நகல்
11.தனிநபர் அடையாள அட்டை (Individual identity card)
12. கடன் தாரர் மற்றும் பிணையதாரர் புகைப்படங்கள்
13. இறுதியாக மின் கட்டணம், சொத்துவரி செலுத்திய ரசீது.
14 தொழில் நிறுவன முகவரி சான்று ( மாத ஊதியம் பெறாதவர்)
15. விவசாயிகள் மற்றும் மற்றவர்களின் வருமானம் ரூ.10,000/- அல்லது அதற்கு மேல் இருந்தால், வட்டாச்சியர் அல்லது பட்டய கணக்காளர் வருவாய் சான்று பெற்று இணைக்க வேண்டும்.
16. ஊதியம் வரவு வைக்கப்படும் வங்கிக் கணக்கு, கடந்த ஆறு மாதங்களுக்கு பெற்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

16.

கடனை முடிவுகட்டுதல் ( Foreclosure)

1) அடமானம் கொடுக்கப்பட்ட சொத்தின் மதிப்பு குறைந்து, அந்த குறைவை ஈடுசெய்ய, கூடுதல் அடமானம் கொடுக்காமல் இருந்தால் , அல்லது மதிப்பு குறைந்த அளவுக்கான் தொகையை செலுத்தாமல் இருந்தால் , கடனை தவணைக்கு முன் முடிவு கட்டலாம்.
2) கடன் நிபந்தனைகளை மீறி செயல்பட்டால், கடனை தவணைக்கு முன் முடிவு கட்டலாம்.
3) வங்கியின் நகல் பாதிக்கப்படுமானால் அல்லது ஏதாவது மறைக்கப்பட்டது தெரியவந்தால், கடனை தவணைக்கு முன் முடிவு கட்டலாம்.

17.

கடனை திரும்ப செலுத்துதல்

1) மாதாந்திர தவணை தொகையை ( Equal Monthly Installment (EMI)) ஒவ்வொரு மாதமும் 10ம் நாளுக்கு முன் வட்டியுடன் செலுத்த வேண்டும்.
2) கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, குடிபுகுந்த உடன், அல்லது கடன் முதல் தவணி பட்டுவாடா செய்த நாளிலிருந்து 12 மாதங்கள் முடிந்த நாள், இதில் எது முந்தியதோ, அதிலிருந்து முதல் தவணை நிர்ணயிக்கப்பட வேண்டும்.
3) கட்டிய வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வாங்கினால், வாங்கிய நாளிலிருந்து முதல் மாதம், முதல் தவணைத் தொகைசெலுத்த வேண்டும்.
4) தவணைத்தொகை கட்டத் தவறினால் பதிவுத் தபால் அனுப்பி சட்டப்படி நடவடிக்கை தொடர்ந்து செலவுத்தொகை உட்பட வசூல் செய்ய வேண்டும்.
5) மனுதாரர் இறந்துவிட்டால் வாரிசுகளிடமிருந்து முழுத்தொகையும் வசூலிக்கப்பட வேண்டும்.
6) ஆனால், கடன் பெற்ற நாளிலிருந்து ஓராண்டுக்கு முன்பே, கடன் தொகை முழுவதையும் செலுத்தினால், ரூ 5,000/- அல்லது கடன் நிலுவையில் ஒரு விழுக்காடு (1%) இதில் எது அதிகமோ அத்தொகை வங்கி கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும்.
7) வேறு வங்கி அல்லது நிதி நிறுவனம் மூலம் கடன் முழுவதையும் எடுத்துக் கொள்வது மூலம் ( Take Over) கடன் நிலுவை செலுத்துவதாக இருந்தால், அப்போதைய தொகைக்கு 2% வங்கி கட்டணம் வசூலிக்க வேண்டும். இத்தொகைக்கு GST வசூலிக்க வேண்டும்.

18.

பொதுவானவை

1) கடன் மனுவில் அனைத்து தகவல்களும் இணைப்புகளும் உள்ளனவா, என்பதை மேலாளர் உறுதி செய்ய வேண்டும். சட்ட ஆலோசகரின் கருத்துக்குப் பின்னர், கடன் மனு அனுமதிக்கும் பரிசீலிக்கப்படவேண்டும்.
2) கட்டடத்தின் சந்தை மதிப்பு மற்றும் அரசு நிர்ணயிக்கப்பட்ட மதிப்பையும் தெரிந்து , கட்டட மதிப்பை முடிவு செய்ய வேண்டும்.
3) வங்கிக்கு அடமானம் கொடுத்த பின்னர், வங்கியின் பெயரும் சேர்த்து வில்லங்கச் சான்று பெற வேண்டும்.
4) ஒவ்வொரு ஆண்டும் வில்லங்கச்சான்று பெற்று கோப்பில் வைக்க வேண்டும்.

19.

கடன் அனுமதிக்குப் பின்னர்

காப்பீடு, ஒவ்வொரு ஆண்டும் கடன் வாங்கியவரால் புதுப்பிக்கப்படுவதை, வங்கி உறுதி செய்ய வேண்டும்.