logo


1 / 3
2 / 3
3 / 3




    கூட்டுப் பொறுப்புக்குழு - முதலீட்டுக் கடன்



1.

கடன் திட்டத்தின் பெயர்

கூட்டுப் பொறுப்புக்குழு - முதலீட்டுக் கடன்

2.

நோக்கம்

1) சிறு குறு விவசாயிகளின் வருமான அளவை உயர்த்துதல்
2) அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்
3) விவசாய நடவடிக்கைகளை அதிகரித்தல்
4) நவீன தொழில் நுட்பத்தை முழுமையாக பயன்படுத்துதல்.
5) விவசாயம் மற்றும் விவசாயம் தொடர்பான உற்பத்தியை அதிகரித்தல்

3.

கடன் பெற தகுதியானவர்கள்

1) சிறு குறு மற்றும் குத்தகை விவசாயிகள்
2) ஒரே வகையான பயிர் சாகுபடி செய்பவர்கள்
3) கோயில் நிலங்களில் பயிர் செய்பவர்கள்
4) அரசு வழங்கிய இலவச நிலம் வைத்திருப்பவர்கள்
5) நிலங்களுக்கு உரிய உரிமை ஆவணங்கள் இல்லாதவர்கள்
6) முறையான ஆவணங்கள் இல்லாது, வாய்மொழி மூலம் குத்தகை விவசாயம் உறுப்பினர்கள்
7) இவர்களை கொண்டு உருவாக்கப்பட்ட கூட்டுப்பொறுப்புக் குழுக்கள் அல்லது உறுப்பினர்கள்
8 கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் குறைந்தது ஆறு மாதங்களுக்கு மேல் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்
9) குழுக்களின் மாதாந்திர கூட்டங்கல் 90% வருகைப்பதிவுடன் நடத்தப்பட்டிருக்க வேண்டும்
10) உறுப்பினர்களின் சேமிப்பு உயர்த்தப்பட்டிருக்க வேண்டும்.

4.

கடன் வழங்கும் நிறுவனம்

இக்கடன் கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக

5.

கடன் வழங்க தகுதியான நோக்கங்கள்

குழு அல்லது உறுப்பினர்களுக்கு விவசாயம் அல்லது விவசாயம் தொடர்பான கூட்டுப்பொறுப்பு அல்லது தனி பொறுப்பில் கீழ்க்கண்ட நோக்கங்களுக்கு கடன் வழ்ங்கலாம்.

1) சிறு பாசனத்திட்டம்
2) நுண்ணீர் பாசனம்
3) பன்னை இயந்திரமாக்குதல்
4) துல்லிய பண்ணைச் சாகுபடி
5) தோட்டப்பயிர்கள் / காய்கறி / கணிகள்/ ஜெட் ரோபா சாகுபடி
6) சேமிப்பு கிடங்கு / விற்பனை வளாகங்கள்
7) ஒப்பந்த விவசாயம்
8) பால்பண்ணை / கறவை மாடுகள் / கால்நடை பராமரிப்பு
9) ஆடு வளர்ப்பு
100 கோழி / வாங்கோழி வளர்ப்பு 11) கைவினைப் பொருட்கள் / கைத்தறி / விசைத்தறி

அ) பட்டு உற்பத்தி
ஆ) தேனி வளர்ப்பு
இ) அரசு முன்மொழிவுத் திட்டங்கள்
ஈ) தேசிய வங்கி ஒப்புதலளிக்கப்பட்ட திட்டங்கள்

6.

மத்தியக் கால கடன்

இத்தொழில் மூலம் தொடர்ந்து வருமானம் வருவதால் இத்தகைய கடன் கள் மத்திய காலக் கடன் கள் ஆகும்.

7.

கடன் தொகை

1) உச்ச அளவு கடன் தொகை ரூ5.00 லட்சம்
2) முழு அல்லது உறுப்பினர்களின் திட்டத்திற்கான சொத்துக்கலின் தேய்மானம் ஆகியவற்றை கருத்திற்கொண்டு கடன் தொகையின் அளவு முடிவு செய்யப்படும்.Br> 3) கடன் தேவை ரூ.5.0 லட்சத்திற்கு அதிகமாக இருந்தால் இந்திய தலைமை வங்கி (RBI)அல்லது தேசிய வங்கியின் (NABARD) அறிவுரையின் அடிப்படையில் முடுவு செய்யப்படும்

8.

வட்டி விழுக்காடு

தற்போது நடைமுறையிலிருக்கும் வட்டி 12% வட்டி ஆறு மாதத்திற்கு ஒருமுறை வசூலிக்கப்படும். இந்த வட்டி விகிதம் பதிவாளரின் அறிவுரைக்கு ஏற்ப மாறுதலுக்கு உட்பட்டதாகும்.

9.

விளிம்புத் தொகை

வ்ங்கி வழங்கும் கடனில் 5% விளிம்புத்தொகையாக குழு உறுப்பினர் செலுத்த வேண்டும்.

10.

அசையும் / அசையா சொத்துக்கள் உருவாக்குதல்

1) கடன் தொகை மூலம் உருவாக்கப்படும் சொத்தின் மதிப்பு தரம் போன்றவை குழுவினரால் சான்று செய்யப்பட்டு முழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
2) சொத்துக்களை உருவாக்கியது குறித்த சான்றை சங்கத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
3) சங்கத்தின் செயலாளர் நேரில் சென்று சொத்துக்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும்.
4) உற்பத்தி மற்றும் விளைப்பொருட்களை சிறந்த முறையில் சந்தைப்படுத்த தேவையான விற்பனைத் தொடர்புகளை உருவாக்க வேண்டும்.

11.

காப்பீடு

1) சொத்துக்கள் உருவாக்கப்பட்டது அல்லது நடவடிக்கைகளுக்கு ஏற்ப மத்தியக் கூட்டுறவு வங்கியால் தேர்வு செய்யப்பட்ட நிறுவனம் மூலம் காப்பீடு செய்ய வேண்டும்.
2) கடன் தொகையில் காப்பீடு கட்டணமும் சேர்க்கப்பட வேண்டும்.
3) காப்பீடு கட்டணத்தை முழு உறுப்பினர்களின் கனக்கில் பற்று எழுதி காப்பீடு நிறுவனத்திற்கு சங்கம் செலுத்த நிலையான அறிவ்ரை எழுத்து மூலமாக (Standing Instruction in written) குழுவில் அல்லது உறுப்பினர்களிடம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

12.

காப்பீடு ( Insurance)

1) இரு சக்கரவாகனமெனில் கடன் பெறுபவர் மற்றும் வங்கி கூட்டுப் பெயரில் காப்பீடு செய்ய வேண்டும். ஒவ் வொரு ஆண்டும் கடன் தாரர் செலவில் காப்பீடு புதுப்பிக்கப்படுவதை மேலாளர் உறுதி செய்ய வேண்டும்.
2) பதிவுப் புத்தகத்தில் (R.C.Book) வாகனம் வங்கியின் பெயருக்கு ஈடாக (HYpothecation) உள்ளது என்பதை காட்ட வேண்டும்.
3) பதிவு சான்றிதழ் நகல் வங்கியில் ஒப்படைக்கப்பட வேண்டும்,
4) இரண்டு சாவிகளில் ஒன்றை வங்கியில் ஒப்படைக்க வேண்டும்

13.

பாதுகாப்பான கிடங்குகள்

1) உற்பத்தி அல்லது விளைப்பொருட்களை பாதுகாக்க தகுதியான கிட்டங்கி அல்லது கிடங்குகள் இருப்பதை சங்கம் உறுதி செய்ய வேண்டும்.
2) சேமிக்கப்பட்ட விளைபொருட்களை விற்பனை செய்ய தேவையான நடவடிக்கைகளை குழு மேற்க்கொள்ள வேண்டும்.

14.

பிணையம்

1) கடனை திரும்ப செலுத்த அனைத்து உறுப்பினர்களும் கூட்டாகவும் தனித்தனியாகவும் பொறுப்பேற்க வேண்டும்.
2) கடன்மூலம் உருவாக்கப்படும் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் அசல் பத்திர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
3) கடன் தொகை ரூ5/- லட்சத்திற்கு மேல் இருந்தால் நில அடமானம், மூன்றாம் நபர் உத்தரவாதம் அல்லது திட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்ப கூடுதல் பிணையம் பெற வேண்டும்.

15.

ஆவணங்கள்

1) அனைத்து உறுப்பினர்களும் கையோப்பமிட்ட ஒப்பந்தப்பத்திரம்.
2) குழு நிர்வாகிகள் கையொப்பமிட்ட கடன் விண்ணப்பம்.
3) குழுவின் தீர்மானம்
4) கடன் ஒப்பந்தம்
5) திட்ட நடவடிக்கைகளின் தன்மைக்கு ஏற்ப உரிய இதர ஆவணங்கள்
6) கூட்டுறவுச் சங்கங்களின் தன்மைக்கு ஏற்ப உரிய இதர ஆவனங்கள்
7) கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கடிதம் ந.க.51863/08 ம.வ.கொ.1 நாள் 06.08.2008 ல் அறிவுறுத்தியபடி படிவங்கள் 1,4,5,6 மற்றும் 7 பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

16.

கடன் பட்டுவாடா செய்தல்

1) திட்டத்தின் தன்மைக்கேற்ப கடன் தொகை ஒரே தவணையாகவோ அல்லது சில தவணைகளாகவோ அல்லது திட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்ப படிபடியாக சில நிலைகளிலோ பட்டுவாடா செய்யப்படும்,
2) கடன் தொகை தொடர்புடைய நிறுவனத்திற்கோ அல்லது குழுவின் சேமிப்பு கணக்கில் வரவு வைப்பதன் மூலமோ பட்டுவாடா செய்யப்படும்.
3) திட்ட நடவடிக்கைகலுக்காக குழுவின் தீர்மானங்களின் அடிப்படையில் கடன் தொகை பயன்படுத்தப்படவேண்டும்.

17.

கடனை திரும்ப செலுத்தும் காலம்

1) திட்ட நடவடிக்கைகளின் தன்மைக்கேற்ப கடனை திரும்ப செலுத்தும் காலம் 36 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரை அனுமதிக்கப்படும்.
2) திட்டத்தின் நோக்கம் மற்றூம் கடன் பெறும் நடவடிக்கைகளுக்கு ஏற்ப முதல் தவணி செலுத்துவதற்கான இடைவெளி காலம் சங்கத்தின் முடிவுக்கேற்ப அனுமதிக்கப்படும்.

18.

கடன் தவணை தவறுதல்

1) பெற்ற கடனை திரும்ப செலுத்துவது உறுப்பினர்களின் கூட்டுப்பொறுப்பாகும்.
2) தவணை தவறூம் கடன் களுக்கு இதர விவசாய கடன் களுக்கு பின்பற்றப்படும் நடைமுறை பின்பற்றப்பட்டு தவணை தவறிய வட்டி வசூலிக்கப்படும்.
3) கடனை தவணையில் திரும்ப செலுத்தத் தவறினால் பிணையங்களின் அடிப்படையிலும் கூட்டுறவுச்சங்க விதிமுறைகளின் அடிப்படையிலும் கடன் வசூல் நடவடிக்கைகளை சங்கம் மேற்கொள்ளலாம்.

19.

ஆய்வு

கடன் மூலம் உருவாக்கப்படும் சொத்துக்கள் மற்றும் அதன் பயன்பாடுகளை கட்ன் வழங்குக் சங்க அலுவலர்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்யலாம்,

20.

விதிகள் மாற்றம் அல்லது திருத்தம்

இந்த மத்தியகால் முதலீட்டுக்கடன் திட்டம் சிறந்த முறையில் பயன்பட வேண்டும் என்பதால் அவ்வப்போது இந்திய தலைமை வங்கி அல்லது தேசிய வங்கி மற்றும் அரசு வழங்கும் அறிவுறைகளுக்கு ஏற்ப கடன் சங்கங்களின் விதிகளில் மாற்றம் அல்லது திருத்தம் செய்து கொள்ளலாம்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் தேவையான ஒழுங்கு முறை விதிகளை ஏற்படுத்தி துணைப்பதிவாளரின் ஒப்புதலை பெற்று இக்கடன் களை வழங்க வேண்டும்.