logo


1 / 3
2 / 3
3 / 3




    தேசிய சேமிப்பு பத்திரம் / கிசான் விகாஸ் பத்திரம் ஈடாக தவணைக்கடன் காசுக்கடன் / மிகைப்பற்றுக் கடன்



1.

கடன் திட்டத்தின் பெயர்

தேசிய சேமிப்பு பத்திரம் / கிசான் விகாஸ் பத்திரம் ஈடாக தவணைக்கடன் காசுக்கடன் / மிகைப்பற்றுக் கடன்

2.

கடன் பெற தகுதி உள்ளவர்கள்

1) வங்கியின் வாடிக்கையாளர்கள்
2) பத்திரம் வைத்திருப்பவர்கள், அறிமுகம் மற்றும் தனி நபர் அடையாளச் சான்றுடன்
3) வங்கி பணியாளர்கள்

3.

கடன் தன்மை

கடன் அல்லது காசுக்கடன் / மிகை பற்றுக் கடன் ( Loan or Overdraft) அனுமதிக்கலாம். மிகைப்பற்றுக் கடன் அனுமதிக்கப்படுவதாக இருந்தால், நடப்புக் கணக்கு திறக்கப்பட்டு அனுமதிக்கப்பட வேண்டும்.

4.

இணை உறுப்பினர்

கடன் கோருபவர் வங்கியில் ரூ100/-(நூறு) செலுத்தி இணை உறுப்பினராக வேண்டும்..

5.

பத்திரங்களை மாறுதல் செய்தல்

1) இரண்டு பத்திரங்களும் பத்திரம் வழங்கிய அஞ்சலகத்தில் வங்கியின் பெயருக்கு மாறூதல் (Endorsement) செய்யப்படவேண்டும்.
2) கடன்பத்திரங்கள், வங்கிக் கடன் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

6.

வட்டி

1) கடனுக்காக / காசுக்கடனுக்கு வட்டி 12% (விழுக்காடு)
2) வட்டி, மூன்று மாதத்திற்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு ( மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர்) வசூலிக்கப்படவேண்டும்.
3) தவணை தவறிய வட்டி 3% ( மூன்று விழுக்காடு)

7.

தவணைக்காலம்

1) கடனுக்கு 3 (மூன்று) வருடங்கள் அல்லது பத்திரத்தின் தவணை நாள், இதில் எது முந்தியதோ, அந்த நாள் பத்திரம் முதிர்வு நாளாக ( Date of Maturity) கருதப்பட வேண்டும்.
2) காசுக்கடனை பொறுத்தவரையில் ஒவ் வொரு நாள்காட்டி ஆண்டும் புதுப்பிக்கப்படவேண்டும்.( ஜனவரி முதல் டிசம்பர் வரை)

8.

கடன் அளவு

கடன் அளவு, பத்திரத்தின் முகமதிப்பில் ( Face Value) கீழ்க்கண்டவாறூ அனுமதிக்கப்பட வேண்டும்.

1) பத்திரத்தின் முதிர்வு காலம், ஒரு வருடத்திற்குள் இருந்தால் 90%
2) பத்திரத்தின் முதிர்வு காலம் 1 வருடம் முதல் 2 வருடம் வரை இருந்தால் 85%
3) பத்திர்த்தின் முதிர்வு காலம் 2 வருடத்திற்கு மேல் இருந்தால் 85%
4) கடன் நூறின் மடங்குகளில் ( In HUndreds) இருக்க வேண்டும்.

9.

கடனை வசூலித்தல்

பத்திரத்தின் முதிர்வு நாள் அல்லது மூன்றூ ஆண்டுகள், இதில் எது முந்தியதோ, அந்த நாளுக்குள் கடனை வசூல் செய்ய வேண்டும். கடன் தாரர் கடனை திருப்பி செலுத்தாத பட்சத்தில் பத்திர முதிர்வு நாளில் சம்பந்தப்பட்ட கிளை மேலாளர் சம்பந்தப்பட்ட அஞ்சல் அலுவலகத்திற்கு பத்திரத்தை அனுப்பி கடனை வசூல் செய்ய வேண்டும்.
------------

10.

பதிவேடு

கடனுக்கு ஆதாரமாகக் கொடுக்கும் பத்திரங்களை தனி பதிவேட்டில் பதிவு செய்து பாதுகாப்பு அறையில் வைக்கப்பட வேண்டும்.

11.

தலைமை அலுவலகத்திற்கு தெரிவித்தல்

பத்திரங்களின் ஈட்டில் வழங்கப்படும் கடன் கள் அனுமதிக்கப்பட்டதும் கிளை மேலாளர் தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.