logo


1 / 3
2 / 3
3 / 3




    கூட்டு பொறுப்புக்குழுவுக்கு கடன்



1.

கடன் திட்டத்தின் பெயர்

கூட்டு பொறுப்புக்குழுவுக்கு கடன்

2.

கடன் பெற தகுதி உள்ளவர்கள்

1) சிறு, குறு மற்றும் குத்தகை விவசாயிகள்
2) ஒரே வகையான பயிர் செய்பவர்கள்
3) அரசு வழங்கிய இலவச நிலம் வைத்திருப்பவர்கள்
4) கோயில் நிலங்களில் விவசாயம் செய்பவர்கள்
5) நிலங்களுக்கு உரிய ஆவனங்கள் இல்லாதவர்கள்
6) ஆவணங்கள் இல்லாமல் வாய்மொழியின் அடிப்படையில் விவசாயம் செய்து வருபவர்கள்
7) முறையான ஆவணங்களுடன் குத்தகை விவசாயம் செய்பவர்கள்

3.

குழுவில் உறுப்பினராவதற்கு தகுதிகள்

1) சிறு, குறு மற்றும் குத்தகை விவசாயிகள்
2) ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து ஒருவர் மட்டுமே உறுப்பினராகலாம்.
3) உறுப்பினர்கள் அருகருகே தொடர்ச்சியாக நிலம் உடையவர்கள் அல்லது அருகில் நிலம் உடையவர்கள்.
4) ஓரே வகையான பயிர் விவசாயம் செய்பவர்கள்.
5) சொட்டு நீர் பாசனம் வாய்ப்புள்ள விவசாயிகள்.
6) ஒரே கிராமத்தில் நிலம் உடையவர்கள் அல்லது ஒரே மாதிரியான பொருளாதார பின்னணி உள்ளவர்கள்.
7) வேறு எந்த வங்கியிலும் கடன் பெற்று தவனை தவறாதவர்கள்
8) ஏற்கனவே சுய உதவிக்குழுவில் உறுப்பினராக இருப்பவர்களும் இக்குழுவில் சேரலாம்.
9) வயது 18க்கு மேல் 60க்குள் உள்ள ஆண் பெண் இருபாலரும் உறுப்பினராகலாம்.

4.

ஊக்குநர்

கூட்டுப்பொறுப்புக்குழுவில் ஒருவரை பொறுப்புடன் செயல்பட ஊக்குனராக நியமிக்கலாம்..

5.

தொடக்கச் சங்கத்தில் உறுப்பினர்

கூட்டுப்பொறுப்புக்குழு, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத்தில் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 21(1) (அ) (iv) இன்படி உறுப்பினராகலாம்

6.

சுய உதவிக்குழுக்கள் போன்ற செயல்பாடு

கூட்டுப்பொறுப்புக் குழுக்கள் சுய உதவிக்குழுக்கள் போன்ற செயல்பட வேண்டும். இவர்கள் வாரம் ஒருமுறை சந்திக்க வேண்டும். உறுப்பினர்களிடையே சிக்கன நிதி சேகரிக்க வேண்டும். இவர்களது கூட்ட நடவடிக்கை தொடர்பாக பதிவேடு பேணப்பட வேண்டும். பெற்ப்படும் சிக்கன நிதிக்கு கணக்கு வைத்து வரவேண்டும்.

7.

அலுவலர்கள் பங்கு

ஆரம்ப நிலையில் கூட்டுப் பொறுப்புக்குழுவின் 2-3 கூட்டங்களில் இணைப்பதிவாளர் தனி அலுவலர் (மத்திய கூட்டுறவு வங்கி) துணைப்பதிவாளர் மத்திய வங்கியின் கள அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்ட சங்கச் செயலாளர்கள் கலந்து கொண்டு குழுக்கள் சிறப்பாக செயல்பட வழிகாட்ட வேண்டும்

8.

திட்டத்தின் நோக்கம்

1) இலகுவில் வங்கியை அணுக முடியாத மேலே கூறப்பட்ட விவசாயிகள் உரிய பயிற்சி பெற்று ஒருங்கிணைந்து இடுபொருட்கள் பெற்று விவசாயம் மற்றும் இதர பணிகளை மேற்கொண்டு சேமிப்பு மூலம் தன்னிரைவு பெற வேண்டும் என்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
2) கடனை தனியாகவோ அல்லது குழுவாகவோ பெற்று உறுப்பினர்களுக்கு வழங்கி அவற்றை பயன்படுத்தி கடன் வசூல் செய்யப்படுவதையும் உறுதிப்படுத்துதல்.
3) உற்பத்தித் திறனையும் வருவாயையும் அதிகரித்து விவசாயிகளிடையே நட்புணர்வை ஏற்படுத்தி தொடக்க சங்கத்திற்கும் விவசாயிகளுக்கும் உள்ள உறவை வலுப்படுத்துதல்.

9.

குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை / அமைப்பு

ஒவ் வொரு கூடுப்பொறுப்புக்குழுவிலும் 4 முதல் 10 விவசாயிகள் இருக்கலாம். இது ஒருமுறை சாரா அமைப்பாகும். அதனால் பதிவு செய்ய வேண்டிய தேவை இல்லை. இக்குழுவில் ஆண்/பெண் தனியாகவோ அல்லது இருபாலரும் கலந்தோ இருக்கலாம். இக்குழு உறுப்பினர்கள் இணைந்து கூட்டாக கடன்பெறுபவார்கள். கடன் வசூலுக்கும் உறுதிமொழி கொடுப்பார்கள். ஏற்கனவே செயல்படும் விவசாயக்குழுக்களை கூட்டுப்பொறுப்புக் குழுக்களாக மாற்றலாம்.
2) குழு உறுப்பினர்கள் வங்கியில் இணை உறுப்பினராக வேண்டும்.

10.

சேமிப்பு கணக்கு

1) குழுக்கள் ஒருங்கிணைந்து அவர்களாகவே ஒரு சேமிப்பு கணக்கு வங்கியில் இணை உறுப்பினராக வேண்டும்.
2) ஒவ் வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை சேமிக்க ஊக்குவிக்க வேண்டும்.
3) விவசாயம் செய்வதில் தரமான விதையைத் தேர்ந்தெடுத்தல் மண்பரிசோதனை செய்தல் தேவை அடிப்படையில் உரமிடுவது, ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு முறை ஆகியவற்றை பின்பற்றவேண்டும்.
4)கருத்தரங்கங்கள் விவசாயத்துறையுடன் இணைந்து நடத்தப்பட வேண்டும்.

11.

சுழல் நிதி

1) குழு ஒருங்கிணைந்து செயல்பட தயாரான பின்னர் ஒவ் வொரு கூட்டுக்குழுவுக்கும் அதன் கூட்டுக்கணக்கில் ரூ10,000/- விடுவிக்கப்பட வேண்டும்.
2) இந்த் நிதியையும் சேமிப்பையும் பயன்படுத்தி குழு அவர்களது உறுப்பினர்களுக்கு கடன் கொடுத்து விவசாய பணிகளை மேற்கொள்ளச் செய்ய வேண்டும்

12.

அறுவடை

1) அறுவடை மற்றும் அறுவடையைத் தொடரும் பணிகளை கூட்டுப்பொறுப்புக்குழு ஒருங்கிணைத்து விளைப்பொருட்களை விற்பனைக்கு ஏற்பாடு செய்து நல்ல நிலை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2) தேவைப்பட்டால் தானிய ஈட்டுக்கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3) குழு இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது கூடி தேவைகள் பற்றி விவாதித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

13.

சுழல் நிதி மற்றும் பயிர்க் கடன்

1) குழுவுக்கு வழங்கப்படுகின்ற சுழல் நிதி மானியமாக வழங்கவேண்டும்.
2) பயிர்க்கடன், உறுப்பினர்களுக்கு கூட்டாகவோ தனித்தனியாகவோ வழங்கலாம்.
3) பயிர்க்கடனுக்கான வட்டி மற்றவர்களுக்கு வழங்குவது போன்று 7% வசூலிக்கப்படும் கடனை தவணை நாளுக்குள் செலுத்தினால் 4% அல்லது அரசு நிர்ணயிக்கும் வட்டி விகிதம் வசூலிக்கப்படும்.

14.

கடனுக்கு ஆதாரம்

1) கடனுக்கு சொத்து ஆதாரம் தேவை இல்லை. இருப்பினும் உறுப்பினர்கள் கூட்டாக வழங்கும் உறுதிமொழி ஆவணம் மற்றும் பயிர் செய்வதற்கான ஆதார ஆவணங்களைப் பெற்று பேண வேண்டும்.
2) குழுக்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய இனங்கள் ஏதாவது இருந்தால் வங்கியின் பொதுவான நிபந்தனைகள பின்பற்ற வேண்டும்.
3) சுய உதவிக்குழுக்களுக்கு பின்பற்றப்படுகின்ற நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் தொடர்பானவை கூட்டுப் பொறுப்புக்குழுவுக்கும் பின்பற்றப்பட வேண்டும்.

15.

காப்பீடு

1) தனிநபர் விபத்து காப்பீடு பயிர் காப்பீடு ஆகியவற்றை மற்ற பயிர்கடன் களுக்கு வழங்கப்படுவது போன்று பின்பற்றப்பட வேண்டும்.
2) வழங்கப்பட்ட பயிர்க்கடன் வசூலிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

16.

வழங்கவேண்டிய அசல் ஆவணங்கள்

வாடிக்கையாளர்களிடம் கீழ்க்கண்ட ஆவணங்கள் பெற வேண்டும்.

1.புகைப்படம்
2.முகவரிச் சான்று
3) தனிநபர் அடையாளச் சான்று 4) பயிர் செய்வதற்கான ஆதாரம் / உறுதிமொழி
5) கூட்டுப்பொறுப்புக்குழு உறுப்பினர் என்பதற்கான ஆதாரம்